16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
ரஜனி அன்ரன்
“ சுதந்திரமாமே “….கவி…ரஜனி அன்ரன் (B.A) 02.02.2023
சுதந்திர இலங்கையில் சுதந்திரமாம்
சொல்லி மகிழுது அரசும்
மெல்ல முடியாமற் தவிக்குது எம்மினமும்
சடுதியாக ஏறிவிட்ட விலைவாசி
ஒருவேளை உணவிற்கே திண்டாட்டம்
இந்தநிலையில் யாருக்கு சுதந்திரமாம் ?
நசுக்கப்பட்டவர்களின் ஏக்கமும்
பொசுக்கப்பட்ட உணர்வுகளும்
கட்டாயத் திணிப்புக்களும்
ஆதிக்ககாரரின் அடக்குமுறைகளும்
வல்லாதிக்கத்தினரின் வன்முறைகளும்
தகர்க்கப்படும் நாளே சுதந்திர நாளாம்
அதுவரை இல்லை சுதந்திரம் நமக்கு !
காணாமல் ஆக்கப்பட்டோர்க்கு
இன்றுவரை விடையில்லை
சிறையில் வாடுவோர்க்கு
விசாரணையுமில்லை விடுதலையுமில்லை
இந்த நிலையில் யாருக்குச் சுதந்திரம் ?
பேதங்கள் ஒழிந்து பிரிவினைகள் அகன்று
நியாயங்கள் வென்று சமத்துவம் மிளிரும்நாளே
யாவர்க்கும் பூரண சுதந்திரமாம்
அதுவரை இல்லை நமக்குச் சுதந்திரம் !
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...