” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ரஜனி அன்ரன்

“ விஞ்சிடும்விஞ்ஞானம் தந்திடுமாஅமைதி?கவி..ரஜனி அன்ரன்(B.A) 10.11.2022

அண்டவெளியினில் ஆயிரம் அதிசயங்கள்
அதிசயத்தைக் கண்டு கொண்டு
அகிலத்தை ஆட்சி செய்யுது விஞ்ஞானம்
விஞ்ஞானத்தின் விந்தைகளோ பலகோடி
விபரீத விளைவுகளும் இங்கே பலநூறு
விந்தைக்கும் விபரீதத்திற்கும் இடையே
சிந்தை தடுமாறுது நம்வாழ்வு !

கையுக்குள்ளே உலகம் இப்போ
கணணி மயமானதே அத்தனையும்
கண்டுபிடிப்புக்கள் உபகரணங்கள்
கற்றலில் கற்பித்தலில் புதிய மாற்றங்கள்
மருத்துவத் துறையினில் மாபெரும் வெற்றி
மனித வாழ்வினை இலகுவாக்கி
மகத்துவம் கண்டது விஞ்ஞானம் !

விந்தையாக ஒருபுறமும் பேரழிவாக மறுபுறமும்
உலகினைத் திடுக்கிட வைக்குது விஞ்ஞானம்
அணுவாயுதங்கள் வல்லமையைப் பறைசாற்ற
வல்லரசு நாடுகள் போரினைத் தொடர
அழிவுப் பாதையில் அமைதியும் குன்றிட
மனிதமனங்களும் அழுத்தமாக சூழலும் அழுக்காக
மனித குலத்திற்கு சவாலாகுதே விஞ்ஞானம் !

Nada Mohan
Author: Nada Mohan