” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

13.07.23
கவி இலக்கம்- 277
வாழ்வெனும் ஓடம்

ஒரு முறை ஏறும் ஓடமிது
பலமுறை தேறும் பாடமது
நாளும் பொழுதும் படிக்கும்
வேடமிது

ஆணும் பெண்ணும் கலந்த நாடகமிது
வேணும் வேணும் என்றிருப்பின்
கல்லையும் கரைய வைக்கும்
புல்லையும் பூவாக்கும்

பொறுமை நறுமணமாகும்
சிறுமை அறவே மறக்க
முழுமை நிறைவே சிறக்கும்

இன்ப துன்பம் தேடி வரும்
இரவு பகல் போலவே
இடியும் மழையும் நாடி வரும்
நோய் நொடியும் சேரவே
இறப்பும் பிறப்பும் தேடி
வரும்

உழைப்பில் முயற்சி
மனமோ மகிழ்ச்சி
குட்டிச் செல்வங்கள்
குடும்பமுடன் குதூகலமாய்
வாழ்வு இன்பமுடன்
ஓடத்தில் விரைந்திடுமே

Nada Mohan
Author: Nada Mohan