பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

20.07.23
கவி இலக்கம்-278
விடுமுறை வந்தாலே

விடுமுறை வந்தாலே
வீட்டுக்கு வீடு குதூகலக்
கொண்டாட்டம்

அன்றாடம் வேலை
செய்து செய்து உழைத்த
களைப்பில் சோர்வாட்டம்

ஓய்வு எடுப்போமென்றாலும்
சிலருக்கு ஏக்கமுடன்
திண்டாட்டம்

பிள்ளைகளிற்கோ விடுமுறைத்
தெரிவு சந்தோஷக் களிப்பாட்டம்

தந்தைக்கோ முழுசாட்டம்
தன் அப்பா கண் அறுவைச்
சிகிச்சைக்குப் பணம் கேட்டது
தவிப்பாட்டம்

விடுமுறைக்குப் பிள்ளைகளை
அனுப்பிவிட்டு விரைந்து
செல்கிறது இன்னோர் வேலை
தேடி மரத்துப் போன கால்கள்

எட்டி எட்டி நடக்கிறதே
உயிரைக் கையில் பிடித்தபடி
மனப் போராட்டமுடன் .

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

    Continue reading