” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

16.01.24
ஆக்கம் 131
பொங்கலோ பொங்கல்

தாயக அன்றைய நினைவுடன்
தரணியில் பவனி வரும்
தமிழர் இல்லமெல்லாம்
துயரந் தீரப் பொங்கிப்
பங்கிடும் பொங்கல்

மாவிலைத் தோரணமிட்டு
மாவால் அழகு கோலமிட்டு
பாலெடுத்த பானையில்
சர்க்கரைப் பொங்கல்

பூ,பழம்,பொங்கல் படைத்து
பட்டாடை உடுத்து பட்டாசு
சுட்டு ஒளித்தீப விளக்கேற்றி
பலரும் சுவைக்க இனிக்கும்
பொங்கல்

விவசாய விளைச்சல் வீச்சிட
முழுமூச்சாய் பசு பாட்டு
இசைக்கத் தொழுது அக
மலரும் பட்டிப் பொங்கல்

விழுதாய்த் தொடர்ந்து
குழவாய் இணைந்து முழங்கி
பொங்கி உண்டு மகிழும்
பொங்கலோ பொங்கல் .

Nada Mohan
Author: Nada Mohan