28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
18.01.24
கவி இலக்கம் -299
பொங்கும் உளமே
தங்கும் தையே
இன்ப வெள்ளம் பொங்கிப்
பொங்க என்றுந் தங்கும்
இனிய தைப் பொங்கல்
எங்கெங்கெல்லாம் வாழும்
தமிழரில் அங்கெங்கல்லாம்
பங்கிடும் கனிவான பொங்கல்
அதிகாலை எழுந்து ஸ்நானம்
செய்து மாவால் கோலமிட்டு
மாவிலைத் தோரணமிட்டு
பானையில் மஞ்சளிலை சுற்றி
பானையிலிட்ட பால் கொதித்துப்
பொங்க பச்சை அரிசி ,சர்க்கரை
போட்ட இனிப்புப் பொங்கல்
விவசாயி விளைச்சலிட , பரந்த
சூரியக் கதிர் விரிந்து ஒளியிட
பாரினில் பொங்கும் உளமே!
தங்கும் தையே தாங்கும்
காலநிலைச் சீற்றம் தணிந்திடு .
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...