பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

13.02.2024
கவி இலக்கம் -134
பிள்ளைக் கனி அமுது

அள்ள அள்ளக் குறைவில்லாத
வெள்ளை உள்ளம் கொள்ளை
கொள்ளும் பிள்ளைக் கனி
அமுது நிறைவுப் பேரானந்தம்

அள்ளி அள்ளி அரவணைக்கத்
துள்ளித் துள்ளித் தாளமிடும்
கண்ணும் ,இமையும் இரு விழி
பேசும் மழலை மொழி ஆனந்தம்

வெள்ளிக் கைகள் வேவுகாட்டிட
பள்ளிக் கால்களோ போட்டியிட
இருந்தெழுந்து விழுந்தெழும்பிட
பல் இல்லாப் பொக்கை வாய்ச்
சிரிப்போ மிகையானந்தம் .

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading