நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

26.03.24
கவி இலக்கம் -139
மாறுமோ மோகம்

மாறுமோ மனங்களின் மோகம்
தேறுமோ இனங்களின் தாகம்
ஆறுமோ குதர்க்க சோகம்
சாறு பிழிய சேறு பூசும் வேகம்

நாளும் பொழுதும் நோகடிக்க
வாழ்வும் சாவும் மூழ்கடிக்க
மாளும் பொழுது கல்லறை
கண் திறந்து பேசிடுமா ?

பச்சைப் பாலரும் இச்சைக்கு
இணங்காத மங்கையரும்
செய்த பாவம் என்ன ?
பதில் தான் கூறிடுமா ?

மூச்சை நெரிக்கும் ஒரு
நொடியின் காமுகர் போதை
பாதையில் மாறுமா மோகம் ?

Nada Mohan
Author: Nada Mohan