ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

26.03.24
கவி இலக்கம் -139
மாறுமோ மோகம்

மாறுமோ மனங்களின் மோகம்
தேறுமோ இனங்களின் தாகம்
ஆறுமோ குதர்க்க சோகம்
சாறு பிழிய சேறு பூசும் வேகம்

நாளும் பொழுதும் நோகடிக்க
வாழ்வும் சாவும் மூழ்கடிக்க
மாளும் பொழுது கல்லறை
கண் திறந்து பேசிடுமா ?

பச்சைப் பாலரும் இச்சைக்கு
இணங்காத மங்கையரும்
செய்த பாவம் என்ன ?
பதில் தான் கூறிடுமா ?

மூச்சை நெரிக்கும் ஒரு
நொடியின் காமுகர் போதை
பாதையில் மாறுமா மோகம் ?

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading