ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

26.03.24
கவி இலக்கம் -139
மாறுமோ மோகம்

மாறுமோ மனங்களின் மோகம்
தேறுமோ இனங்களின் தாகம்
ஆறுமோ குதர்க்க சோகம்
சாறு பிழிய சேறு பூசும் வேகம்

நாளும் பொழுதும் நோகடிக்க
வாழ்வும் சாவும் மூழ்கடிக்க
மாளும் பொழுது கல்லறை
கண் திறந்து பேசிடுமா ?

பச்சைப் பாலரும் இச்சைக்கு
இணங்காத மங்கையரும்
செய்த பாவம் என்ன ?
பதில் தான் கூறிடுமா ?

மூச்சை நெரிக்கும் ஒரு
நொடியின் காமுகர் போதை
பாதையில் மாறுமா மோகம் ?

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading