” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

26.03.24
கவி இலக்கம் -139
மாறுமோ மோகம்

மாறுமோ மனங்களின் மோகம்
தேறுமோ இனங்களின் தாகம்
ஆறுமோ குதர்க்க சோகம்
சாறு பிழிய சேறு பூசும் வேகம்

நாளும் பொழுதும் நோகடிக்க
வாழ்வும் சாவும் மூழ்கடிக்க
மாளும் பொழுது கல்லறை
கண் திறந்து பேசிடுமா ?

பச்சைப் பாலரும் இச்சைக்கு
இணங்காத மங்கையரும்
செய்த பாவம் என்ன ?
பதில் தான் கூறிடுமா ?

மூச்சை நெரிக்கும் ஒரு
நொடியின் காமுகர் போதை
பாதையில் மாறுமா மோகம் ?

Nada Mohan
Author: Nada Mohan