” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

09.04.24
ஆக்கம்-141
பணம்

பணமில்லை எனில் பாசம் பொங்கிடும்
பண்போடு இனிமை வாசம் தேங்கிடும்
அன்போடு உறவு கூடித் தனிமை
இன்றித் தங்கிடும்

பணமுண்டானால் நிம்மதி மங்கிடும்
தனமோடு பேராசை தொங்கிடும்
ஆணவ அதிகாரம் நியாயமின்றிய
வாழ்வு நோயோடு தூங்கிடும்

போதுமெனில் பேரின்பம் பங்கிடும்
போதாதெனில் பூகம்பம் மொங்கிடும்

அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சே
உளமாற இருப்பதை ஊதிப் பொருமாது
அளவான பணமோடு வாழப் பழகிப்
பங்கிடுவோமே .

Nada Mohan
Author: Nada Mohan