மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

17.11.22
ஆக்கம்-251
முகமூடி
மனித முகமே ஒரு முகமூடி
மனதிலே சோகம் முகத்திலே புன்சிரிப்பு
இனத்திலே தாகம் எப்போது தீருமென்ற
வேகம்

என்ன தாக்கம் சொன்னால் துக்கம்
பின்னிப் பிணைந்து பென்னம்
பெரிதாய் சிதறும் பூகம்பம்
எல்லாம் தெரிந்தும் எந்த நாடும் உதவாது
கல்லுப் பிள்ளையார் போல்
குந்தியிருக்கும் வேடம்

தர்க்கம் புரிந்தவன் வாடுவது சிறையில்
சொர்க்கம் கண்டவன் நாடுவது நிறைவில்
மனிதர் கறையைக் குறைவாக்கி
கூத்தாடியாய்க் குழப்பி அடித்து

நடுவீதியில் பாடம் படித்திடினும்
திருந்தவே முடியாத மோகம்
பிடித்துப்போன தந்திரவாதி
சட்டை கழன்று எப்போதுதான்
முகமூடி கிழியுமோ.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading