” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

18.04.2023
ஆக்கம்-98
சுடர்
ஒவ்வொரு மாவீர தினத்தில்
மரணித்த வீரருக்கு ஏற்றுவது
ஈகைச்சுடரே

தன் உயிரைத் தானமாக்கி இன
விடுதலைக்காய் சொட்டு நீர்
ஆகாரமின்றி உயிர் நீத்த தியாகி
திலீபனைப் போற்றுவது தியாகச்சுடரே

மாணவர் பயின்று முன்னேறிட
ஆசரியர் ஆற்றுவது அறிவுச்சுடரே

தம் தேவைக் கனவைச் சுருக்கி
பிள்ளை நனவைப் பெருக்க
மெழுகுவர்த்தியாய் உருக்குவது
தீபச்சுடரே

சுடர் போடும் ஒளித்தீபம்
இடர் படும் போது பாவமே

ஆணவ அக்கிரமச் சூறாவளியில்
சிக்கித் தவித்துச் சுட்டெரித்து
சுக்குநூறாகும் பூமிப் பந்து .

Nada Mohan
Author: Nada Mohan