” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

25.04.23
ஆக்கம் -99
ஆற்றல்

ஆற்றல் அனைத்திலும் அறிவானவர்
போற்றுதலுக்குரியவரே

கற்றல் எதிலும் செறிவானவர்
முற்று முழுதாக கூனிக்குறுகாது
பேறு பெற்றவரே

முயற்சி என்றும் மூலதனமாக
வளர்ச்சி எதிலும் விளைச்சலாக
அறுவடையானவர் முன்னிற்பவரே

சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல்
கூற்றில் உலர்ந்த கனிவாற்றல்
கிடைத்தால் இனிதானவரே

முற்றிலும் ஆற்றல் பெறுபவரோ
சற்று நீண்ட பயணத்துக்குரியவரே

சுற்றிச் சுழலும் பூமிப் பந்தில்
பற்றிப் பிடிப்பவரே
அறிவு தரும் ஆற்றலுடன் இணைந்தால்
வெற்றிக் கொடி ஏற்றுபவரே .

Nada Mohan
Author: Nada Mohan