மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

14.07.22
உலகப் பூமிப் பந்தில் நான்
ஆக்கம்-234
சுட்ட சூரியனில் சுற்றும் பூமிப் பந்தில்
வெட்ட வெளியில் பாதந் தொட்டபோது
பட்ட வேதனை புட்டு வைத்தது

பொட்டுப் பொட்டாய்த் தொப்பழமானது
வெப்ப மிகுதியால் பூரி அப்பளமாய் வீங்கியது
பஞ்சு போன்ற பாதம்

கொஞ்சம் கிட்டப்போய் என்ன வஞ்சமென்று
திட்ட முனைய உடம்பெல்லாம் வேர்த்து
விறுவிறுக்க

சோ எனக் கொட்டிய பெரு மழையோ
சூடான மனதைக் குளிரப் பண்ணி
வெந்த தசையைச் சொந்தமாக்கித்
தடவிக் கொடுத்தது

உலகப் பூமிப் பந்தில் வெப்பம் அதிகரிப்பினும்
விண்ணுக்கு இரக்கமுண்டு மண்ணில்
உதவிக்கரங் கொடுக்கும் மரம் அழிந்தால்
அரக்க குணம் நெருப்புக் குழம்பாய்
சுட்டெரிக்கும்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading