ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

25.08.22
ஆக்கம்-240
தேடும் விழிக்குள் தேங்கிய வலி
தேடும் விழிக்குள் தொலைத் தூரமான துயரங்கள்
கூடி உறங்கிய உண்மைகள் ஊமையானதே
தமிழனாய்ப் பிறந்து குலைந்து போய்
வெந்து வெதும்பிய அழிவுகள்

அழுது அழுது வீங்கிய கண்களில்
என் உறவு எங்கே என
ஓலமிடும் ஆண்கள் பெண்கள்

நேற்று ,இன்று ,நாளை என்று
எத்தனை வருட வலி
எங்கு எதைப் பார்த்தாலும்
பிரிந்து போன முகங்கள்
இன்னும் விடை தராத தாகங்கள்

விடையே இல்லாத வினாவிற்குள்
தாங்கிய உள்ளமோ தேங்கிய
வலிக்கு கண்ணீர் மட்டுந்தானே
மருந்தாகின்றது

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading