” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

13.09.22
ஆக்கம்-74
எண்ணம்
எண்ணம் போல நினைத்த வாழ்வு
பிறந்த மண்ணில் கிடைக்காது
ஏனிப்படி கடல் கடந்து போனது
கன்னம் வைத்த கயவர் சூழ்வு
கதிரைப்பிடி ஆசை குடைந்தது

அன்னம் தந்த சொந்த மண்
பென்னம் பெரிய இன அழிப்பால்
தமிழ் சமுதாயமே உடைந்து
உலகெங்கும் திக்குத் திக்காய்
அகதி ஆனது

அகதி மண்ணில் எல்லாமிருந்தும்
பகுதியாய் பிரிந்த தொல்லையால்
எதுவும் இல்லை என்ற ஏக்கமதில்
சின்ன வயதிலேயே சீரழிந்து
நல் எண்ணம் தொடர வாழாது
உயிர் நீத்தனரே

Nada Mohan
Author: Nada Mohan