மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

15.09.22
ஆக்கம்-244
பேசாமல் பேசும் மொழி
முன்னால் இருப்பவரோடு கண்ணால் பேசிக்
கருத்து உருப்பட முகபாவனையில்
கை விரல் பின்னலிட அகத்தினால்
தூண்டிலிடும் சொற்கள் கூண்டிலிட
வாய் திறவாது பேசாமல் பேசும்
மொழியே சைகை மொழி

தரணியிலே அதிக விகிதமானோர்
காது கேளாதவர் பட்டியலிலே
சத்தமாய் உளறும் தொழிற்சாலை,
யுத்தமாய்க் கதறும் அதிவேகக்
குண்டு விமானம்,பீரங்கித் தாக்குதல்,
கனரக வாகனம் போன்றன
வளரும் நாடுகளில் பெருந்தாக்கமே

புரட்டாதி 23 விழிப்புணர்வுடன்
அரங்கேறியது சைகை மொழித் தினம்
இதனாலே உருவானதே
உண்மைப் போராட்டமதில் உரிமைக் குரல்
மௌன அசைவு மொழியிட ஊடகத்தில்
உயிரூட்டி உலகெங்கும் பறை சாற்றி
விழிப்புணர்வு ஊட்டுவதும் இதுவே
சைகை மொழி .

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading