” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

27.09.22
ஆக்கம் 76
மழை நீர்
அதிக காலம் மழை இல்லை என்று
ஆலய வழிபாடு செய்த விவசாயி அன்று
மகிழ்ந்திடவே

மேகம் கறுத்தது வானம் இருண்டது
மெல்லிய காற்றுடன் கூடிய மழை
சோ எனப் பெய்தது

சிறுவர் கூடி ஓடி ஓடி அங்குமிங்கும்
வெள்ளத்தில் படகு விட்டு படகு மேல்
பூக்கள் போட்டு மிதக்க விட்டுப்
போட்டி போட்டனர்

பெய்த மழை நீரில் இழையோர் நனைந்து
மழலைகள் கையாலேந்திக் குடித்து
ஆடிப் பாடி மகிழ்ந்திடவே பெற்றோரும்
கலந்து துள்ளிக் குதித்து ஆனந்தக்
கூத்தாடினரே.

Nada Mohan
Author: Nada Mohan