ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

27.09.22
ஆக்கம் 76
மழை நீர்
அதிக காலம் மழை இல்லை என்று
ஆலய வழிபாடு செய்த விவசாயி அன்று
மகிழ்ந்திடவே

மேகம் கறுத்தது வானம் இருண்டது
மெல்லிய காற்றுடன் கூடிய மழை
சோ எனப் பெய்தது

சிறுவர் கூடி ஓடி ஓடி அங்குமிங்கும்
வெள்ளத்தில் படகு விட்டு படகு மேல்
பூக்கள் போட்டு மிதக்க விட்டுப்
போட்டி போட்டனர்

பெய்த மழை நீரில் இழையோர் நனைந்து
மழலைகள் கையாலேந்திக் குடித்து
ஆடிப் பாடி மகிழ்ந்திடவே பெற்றோரும்
கலந்து துள்ளிக் குதித்து ஆனந்தக்
கூத்தாடினரே.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading