” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ராணி சம்பந்தர்

30.07.24
ஆக்கம் -155
விடுமுறை

விடுமுறை என்றதும்
மாணவர், தொழிலாளர்,
வீட்டிலுள்ளோர்க்கு
வலு ஆனந்தம்

திருமுறை வசனமாய்த்
திரும்பத் திரும்ப மனங்
குளிரப் பலமுறை உச்சரிப்பில் பேரானந்தம்

எங்கே போனாலும்
எதில் தாவினாலும்
அங்கே விபரீத உயிர்
இழப்பு நாளாந்தம்

விமானத்தில் நடுக்கமுடன் குலுக்கல்,
வாகனத்தில் போக்குவரத்து நெரிசல்
விபத்தும்,
காடையரில் வெறித்தன
வேட்டும்
நாட்டு நடப்பில் போதுமே சேதாந்தம்

கோடை கால விடுமுறை
தடை போட்டு வீட்டில்
அடை பட்டு முடங்கி
அடங்கி ஒடுங்கிய

வீட்டு வேலை கூட்டாய்ச்
சேர்ந்து முடித்த அழகு
மனம் நிறைவாய்க்
கழிந்த விடுமுறையே .

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan