பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

ராணி சம்பந்தர்

30.01.24
ஆக்கம் 132
மாசி

மாசிப் பனி புல் நுனி
பூ மொட்டழகாய் முட்டும்
வாழை,மாவிலையில்
துளி நீர் சொட்டுச் சொட்டாய்ச் சொட்டும்

மாசி வெப்பமோ கண் கூசி மின்னிடும்
மூசிய பனிப் புகையோ
பேசி மேனியிடும்
நாசி அடைத்து நீர் வடிய
தூசி குடைந்து தும்மிட

பாதித் தூக்கமோ வெடிக்கும்
மீதி சொல் வராது
வாய் தந்தி அடிக்கும்

சோதி வடிவில் மாசி மகம், சதுர்த்தி விரதம்
நினைவு வர சோர்வு
இன்றிய உற்சாகம்
பொங்கிடுமே .

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading