19
May
செல்வி நித்தியானந்தன்
முயற்சியே பலம்
முனைப்பே திடம்
மானிட பிறப்பின்
மகத்தான பலமே
மனஉறுதி என்றுமே
திடமான முனைப்பே
முயற்சியின் பயனே
முற்றிலும்...
14
May
குமுதினிப் படுகொலை – 90, 41ஆம் ஆண்டு நினைவு
ஜெபா ஸ்ரீதெய்வீகன் - கனடா
15-05-2026
ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி...
14
May
பெருவலி சுமந்த பேரிடர்……
ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026
மேபதினெட்டு மேதினியின் கரிநாள்
பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள்
வெறும்...
ராணி சம்பந்தர்
28.05.24
ஆக்கம் 148
வேள்வி
சுற்றி வந்து அடித்த அலாரம் போல் அதிகாலை 5 மணி
தொற்றிய ஓலம்
போற்றிய காட்டு வைரவர் வேள்வி
சற்று உரத்து வெடித்து
அழைத்தது பறை மேளம்
வீதியில் பெருவாரி ஊற்றுச் சீர் வரிசை
பாதி மொழிக் கூற்று
“மே ,மே எனச் சேதி
சொல்லும் நாதியற்ற
பீதியில் பரிதாபக் குமிறல் பார்வை விழியில்
நெற்றிப் பொட்டு கழுத்தில் பூமாலை
பற்றிப் பிடிக்கும் கயிறு
கல்யாணக் கிடாய்
மாப்பிள்ளை ஊர்வலம்
அடுத்த சில நிமிடம்
கழுத்து அறுத்து தலை
வேறாக்கும் பார்த்த
சாரதிக்கு முண்டம்
ஆக்கும் மரண
தண்டனைக் கைதிக்குத்
தினமும் தடவித் தடவி
உணவூட்டிய கையே
இரத்தஞ் சொட்டச் சொட்டப் பலா மரத்தில்
தொங்க விட்டுத் தோல்
உரித்துப் பங்கு போட்டு
உண்ட இறைச்சி
தொண்டையில் சிக்கியதே வளர்த்த கடா
மார்பில் பாயாதே
அடுத்த வேள்வியிலும்
சொல்ல முடியாது விக்கியதே .
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...