நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

வசந்தம் ஒரு வரவு

நகுலா சிவநாதன்
வசந்தம் ஒரு வரவு

வசந்தம் ஒரு வண்ணம்
வாழ்வே புதுவெண்ணம்
சுகந்தம் தருமே சுகம்
சுடராய் எரியும் கதிரினொளி

தென்றல் தவழும் இன்பம்
தேனாய் இருக்கும் குருவிரீங்காரம்
மன்றம் மகிழும் மலர்கள்
மனிதா இதை நீ உணர்

மலர்கள் மலரும் பாதை
மகிழ்வே துளிர்க்கும் மனதும்
புலரும் எங்கள் புதுவாழ்வும்
புதுமை படைக்கும் புதுக்கனவாய்

வசந்தம் சொல்வது வரவு
வாழ்ந்து மடிவது இயற்கை
சுகந்தம் தந்திடும்காலம்
துணிவாய் அனுபவி தினமும்

நகுலா சிவநாதன் 1857

Nada Mohan
Author: Nada Mohan