ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்..2353

ஐயாயிரம் ஆண்டுகள் முன்பே வையகத்தில் உதித்த கலையாம் இந்திய தேசத்தில் தோற்றம் வேதங்களில் உண்டே ஆதாரம் முனிவரும் யோகியரும்...

Continue reading

வசந்தம் ஒரு வரவு

நகுலா சிவநாதன்
வசந்தம் ஒரு வரவு

வசந்தம் ஒரு வண்ணம்
வாழ்வே புதுவெண்ணம்
சுகந்தம் தருமே சுகம்
சுடராய் எரியும் கதிரினொளி

தென்றல் தவழும் இன்பம்
தேனாய் இருக்கும் குருவிரீங்காரம்
மன்றம் மகிழும் மலர்கள்
மனிதா இதை நீ உணர்

மலர்கள் மலரும் பாதை
மகிழ்வே துளிர்க்கும் மனதும்
புலரும் எங்கள் புதுவாழ்வும்
புதுமை படைக்கும் புதுக்கனவாய்

வசந்தம் சொல்வது வரவு
வாழ்ந்து மடிவது இயற்கை
சுகந்தம் தந்திடும்காலம்
துணிவாய் அனுபவி தினமும்

நகுலா சிவநாதன் 1857

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

Continue reading