வசந்தம் ஒரு வரவு

நகுலா சிவநாதன்
வசந்தம் ஒரு வரவு

வசந்தம் ஒரு வண்ணம்
வாழ்வே புதுவெண்ணம்
சுகந்தம் தருமே சுகம்
சுடராய் எரியும் கதிரினொளி

தென்றல் தவழும் இன்பம்
தேனாய் இருக்கும் குருவிரீங்காரம்
மன்றம் மகிழும் மலர்கள்
மனிதா இதை நீ உணர்

மலர்கள் மலரும் பாதை
மகிழ்வே துளிர்க்கும் மனதும்
புலரும் எங்கள் புதுவாழ்வும்
புதுமை படைக்கும் புதுக்கனவாய்

வசந்தம் சொல்வது வரவு
வாழ்ந்து மடிவது இயற்கை
சுகந்தம் தந்திடும்காலம்
துணிவாய் அனுபவி தினமும்

நகுலா சிவநாதன் 1857

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading