வசந்தம் ஒரு வரவு

நகுலா சிவநாதன்
வசந்தம் ஒரு வரவு

வசந்தம் ஒரு வண்ணம்
வாழ்வே புதுவெண்ணம்
சுகந்தம் தருமே சுகம்
சுடராய் எரியும் கதிரினொளி

தென்றல் தவழும் இன்பம்
தேனாய் இருக்கும் குருவிரீங்காரம்
மன்றம் மகிழும் மலர்கள்
மனிதா இதை நீ உணர்

மலர்கள் மலரும் பாதை
மகிழ்வே துளிர்க்கும் மனதும்
புலரும் எங்கள் புதுவாழ்வும்
புதுமை படைக்கும் புதுக்கனவாய்

வசந்தம் சொல்வது வரவு
வாழ்ந்து மடிவது இயற்கை
சுகந்தம் தந்திடும்காலம்
துணிவாய் அனுபவி தினமும்

நகுலா சிவநாதன் 1857

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading