” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

மாசி.. மாசி
ஈராறில் ஒற்றையிவள்
இரண்டாம் திங்களிவள்
பருவத்தில் பனிப்பூவாய்
காலத்தில் கன்னிகையாய்
மாசியென மதிப்பாவாள்
மாந்தரிடை காதலர்தினமாய்
மனங்களில் இணைவாகும்
மாசியென உயர்வாகும்

மாசியின் மதிப்பேடு
மன்றுகள் பலநூறு
சிவனுக்கு ஓரிரவு
சிவராத்திரியாய் நற்பொழுது
பூரிக்கும் பூம்பனியில்
பூக்குமே மாசிமகம்
மாசியின் பேரேடு
மாற்றத்தின் பிறப்பேடு
உணவோடு ருசிக்கும்
மாசியும் மணக்கும்
வாழ்க்கையின் இருகூறாய்
வரவேற்று வாழ்வோம்
வளமான மாசியே வரமாகும் தினமாய்!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan