” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

பருவங்கள் பலதாய்….
காலமும் நேரமும் கணதியுறும்
காத்திடம் மிக்கதாய் வளர்ச்சிபெறும்
பருவங்கள் பலதாய் பயணிக்கும்
பற்பல மாற்றங்கள் மெய்ப்பிக்கும்
ஆண்டிலும் உண்டு அத்தாட்சி
அனுதின வளர்ச்சிக்கு பெரும்சாட்சி
மனிதருக்கும் உண்டு படிநிலை
மாற்றத்தின் கதவுகள் வளர்பிறை
இளமைக்கு இல்லை தடையேதும்
முதுமைக்குள் முடங்கும் தன்னார்வம்
பசுமையின் இலைபோல பளபளப்பு
சருகுகள் போல சாய்ந்திடுமே
எத்தனை பாடுகள் வரலாறாய்
எண்ணற்ற பாடுகள் சுமைதாங்கும்
பருவத்தின் கதவே பட்டறிவு
ஞாலத்தை சுட்டிடும் நல்லேடு!
நன்றி
மிக்க நன்றி .

Nada Mohan
Author: Nada Mohan