மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

வேலியடைப்போம்…
விடுதலை தாங்கிய உணர்விலே ஒன்றி
விதையற்ற சங்கதிகள் மனதிற்குள் தங்கி
புறமிடும் செயல்களே உலகிடை வங்கி
பூத்தே தான் குலுங்குது தமிழினம் மங்கி!

அரணிட்டு அறம்பேணி வாழ்ந்திட்ட முறை
அலங்கோலமானதே அகதியின் வாழ்வில்
புலமது பெயர்ந்திங்கு புதுக்கோலம் சூடி
வேலிகளற்றே வாழ்கின்றோம் வாடி!

கணினியின் யுகமென கடுகதி வாழ்வு
கணக்கற்ற இனத்தோடு பிணைப்புகள் கூடி
எல்லைகள் எதிலிட்டால் அரணாகும் வாழ்வு
எத்தனை முகமூடி எமக்குள்ளே கோடி

முள்வேலியிட்டாலும் முற்றாகத் தகரும்
மதில்வேலி போடினும் மறுப்பின்றி உடையும்
வேலியின் காப்பினை தாண்டியே பயிர்கள்
விளைந்து தான் விருட்சமாய் மாறுமே நாளை!

நன்றி மிக்கநன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading