” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

பெருகிவிடும் வலிமை
பெற்றுயரத் தடையேது…
மறவர்நிலை வீரம்
மனதின் நிலை ஈரம்
வாழ்வின் நிலை பாரம்
வலிமை நிலை கூறும்
வலிகள் தடை பாடம்
வலுப்பெறுமே நாளும்
காயமது பெரிது
காலமது உறவு
ஞாலமது குடையே
நம்பிக்கை புடமே
நம்மை நாம் தீட்டும்
நல்லறிவு பலமே
பட்டறிவு திடமே
சுட்டிட சுட்டிட தங்கமே
ஒளிரும்
பட்டிட பட்டிட பாதைகள்
புலரும்
திடமிடும் உரத்தில்
பலம்பெறல் முறைமை
வலிமையின் வரத்தில்
வாய்ப்புக்கள் அருமை
தருணத்தை அறிந்து
தக்கவை உணர்ந்து
பெருகிவிடும் வலிமையில்
பெற்றுயர்வோம் புலமை
பேறுபெற்ற சமூகமாய்
வென்றுயர்வோம் வெற்றி!.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan