பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

கருணையின் கலங்கரை...

அன்னையெனும் பொக்கிசம்
அரவணைப்பில் மகத்துவம்
பிறர் அன்பின் தனித்துவம்
பேரன்பின் பெருந்தேட்டம்
உன்னதத்தின் உழைப்பாளி
உயிர்காக்கும் பணியாளி
தன்னையே அர்ப்பணமாய்
தன்சேவை சமர்ப்பணமாய்
எண்ணற்ற சேவகத்தில்
இணைந்திட்ட ஈகைத்தாய்
அன்னை தெரேசா அகிலத்தின் விடியலாய் அவலத்தின் துடுப்பாகி
இனமத பேதமின்றி
ஏழைகளின் தேவதை
மனம்குன்றும் நோயாளி
மாற்றுத் திறனாளி
புறக்கணிப்பில் போக்கிடமற்றோர்கள்
காசநோய் வாட்டத்தில் கவனிப்பு அற்றோரை
கரம்கொடுத்து காத்த தாய்
வழிகாட்டி வரம்கொடுத்து
வலி போக்கிய வள்ளல் நீயம்மா
ஈகையின் இலக்கணமே
ஈரத்தின் உறைவிடமே
கருணையின் கலங்கரையே
காலத்தின் பேரொளியே
வாழ்வின் பின்னும் நீளும் புகழாரம்.
நன்றி. மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading