மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

உளவாளி ..
விளைவுகள் பாய்ச்சும் நீரோட்டம்
விளைந்திடும் அறிவின் கண்ணோட்டம்
ஆற்றிடும் காரியம் பலவாகும்
அரும்பென முகிழ்வது அன்பாகும்
அறிதல் தெரிதல் அளப்பெரிதாய்
அன்றெனப் பகிர்தலே நன்றி நிலை
மதிப்பும் உயர்வும் மண்டியிட
மகிழும் உளமே உவகை பெற
உதிரும் வார்த்தை உளமார
பகிரும் நன்றிப் பண்பாடு
பயிலும் வாழ்வின் விலையேது
சேவை சமூகம் செய்தொழிலில்
நாளும் பலமே நல்வாழ்வு
நட்பு உறவு வாழ்வியலில்
நன்றிக்கு உரித்தே நம்வாழ்வு
என்றும் மறவாக் கைமாறு
எழுத்தில் பதியா பேரேடு
உலகை உணர்த்தும் உபகாரி
உளத்தில் நிலைக்கும் உளவாளி!.
நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading