வசந்தா ஜெகதீசன்

உளவாளி ..
விளைவுகள் பாய்ச்சும் நீரோட்டம்
விளைந்திடும் அறிவின் கண்ணோட்டம்
ஆற்றிடும் காரியம் பலவாகும்
அரும்பென முகிழ்வது அன்பாகும்
அறிதல் தெரிதல் அளப்பெரிதாய்
அன்றெனப் பகிர்தலே நன்றி நிலை
மதிப்பும் உயர்வும் மண்டியிட
மகிழும் உளமே உவகை பெற
உதிரும் வார்த்தை உளமார
பகிரும் நன்றிப் பண்பாடு
பயிலும் வாழ்வின் விலையேது
சேவை சமூகம் செய்தொழிலில்
நாளும் பலமே நல்வாழ்வு
நட்பு உறவு வாழ்வியலில்
நன்றிக்கு உரித்தே நம்வாழ்வு
என்றும் மறவாக் கைமாறு
எழுத்தில் பதியா பேரேடு
உலகை உணர்த்தும் உபகாரி
உளத்தில் நிலைக்கும் உளவாளி!.
நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading