” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

உலகவிழிக்குள் ஒற்றைமுகவரி
அடையாளப் பதிப்பின் ஆணிவேர்
அன்னை மொழியின் ஆழவேர்
என்னைச் சுமக்கும் முகவரியே
ஏற்றம் போற்றும் தாய்மொழியே

தரணியில் தோன்றிய வரலாறு
தனித்துவமான நிலைப்பேறு
சங்கமருவிய காலம் முதல்
செம்மொழிச் சிறப்பின் வேரோடி
சிந்தை நிறைக்கும் தாய்மொழியே
இலக்கண இலக்கிய நயத்திலே
ஈடிணையற்றது எம்மொழியே
ஆன்றோர் ஆற்றல் புலமையும்
அதிமதுரத் தமிழின் இளமையில்
வான்புகழ் வார்த்த திருக்குறளும் வானுயர்ந்த சான்றின் செதுக்கலில்
வாழும் தாய்மொழி காவியமே

அடுத்த தலைமுறை விருட்சத்தின்
ஆணிவேரே நீ வாழி
இலகுதமிழின் இயல்திறனில்
அழகு நிரம்பி நடைபயில்க!
தாய்மொழி நீயே தனியழகே!
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan