மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

உலகவிழிக்குள் ஒற்றைமுகவரி
அடையாளப் பதிப்பின் ஆணிவேர்
அன்னை மொழியின் ஆழவேர்
என்னைச் சுமக்கும் முகவரியே
ஏற்றம் போற்றும் தாய்மொழியே

தரணியில் தோன்றிய வரலாறு
தனித்துவமான நிலைப்பேறு
சங்கமருவிய காலம் முதல்
செம்மொழிச் சிறப்பின் வேரோடி
சிந்தை நிறைக்கும் தாய்மொழியே
இலக்கண இலக்கிய நயத்திலே
ஈடிணையற்றது எம்மொழியே
ஆன்றோர் ஆற்றல் புலமையும்
அதிமதுரத் தமிழின் இளமையில்
வான்புகழ் வார்த்த திருக்குறளும் வானுயர்ந்த சான்றின் செதுக்கலில்
வாழும் தாய்மொழி காவியமே

அடுத்த தலைமுறை விருட்சத்தின்
ஆணிவேரே நீ வாழி
இலகுதமிழின் இயல்திறனில்
அழகு நிரம்பி நடைபயில்க!
தாய்மொழி நீயே தனியழகே!
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading