” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

நிறைமதியாய் நின்றுயர்க….
இருமன இணைவு
திருமண மகிழ்வு
எழிலென உறவு
ஏற்றமே உயர்வு
முத்தமிழ் முனைப்பு
முதலொலி கனவு
வளர்மதியாகி வாழிய வாழிய பல்லாண்டு!

தகமையில் புனைவு
தன்னம்பிக்கை செறிவு
உருவாக்க உழைப்பு
உலகாளும் நிமிர்வு
மகிழ்விலே மலர்வு
மனங்களின் இணைவு
வாழிய வாழிய பல்லாண்டு!

வண்ணமாய் மின்னும்
வாழ்விலே சொந்தம்
சேயவள் ராகவி
செல்லத்தின் பந்தம்
அறன்நிறை ஆற்றல்
அன்பிலே பரவசம்
வளர்முகமாகி வானையே முட்டும்
நிறைமதி வாழ்வில் நின்றுயர்க!

சிறைபடு அகத்தில்
சிப்பிக்குள் முத்தாய் மிகைபட நீவீர்
மிளிருதே வாழ்வு
நிறைமதி நித்திலம் வாழிய வாழியவே.!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan