” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

சுடுகின்ற சுவடுகள்…
வலுவிழந்து தள்ளாடும்
வயோதிப மனிதம்
வளமாக்க உழைத்து நின்ற
வாய்ப்புக்கள் அதிகம்

தங்குநிழல் மரமாகி
குடைவிரித்த தருணம்
தாங்கி நிற்கும் உறுதியிலே
தளிர்கொடிகள் அதிகம்

படிப்படியாய் முன்னேறி
பலபடிகள் தாண்டும்
பக்குவமாய் பட்டறிவு
பலகதைகள் புனையும்

ஆன்றோராய் சான்றோராய்
அனுதினமும் நகரும்
அவரவர் வாழ்வினிலே
அத்தியாயம் பகிரும்

சுடுகின்ற சுவடுகளும்
சூழலிலே உறையும்
தத்தளிக்கும் மனிதமென
தள்ளாடும் முதுமை

வற்றிவிட்ட குளம் போல
வரண்டு போகும் நிலைமை
எத்தனையோ வரம்பமைத்து
ஏற்றி வைத்த அரணில்

பற்றிநின்று பாதுகாக்கும்
மனிதமற்ற நாதி
சுடுகின்ற சுவடுகளே
சூழல் தந்த பாடம்.
நன்றி
மிக்க நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan