நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

உதயமாகும் திங்களே….
முதலொலியாய் முகிழ்ந்தாய்
முழுமதியாய் நிறைந்தாய்
படைப்புகளும் தொகுப்புகளும்
உருவாக்கப் படைப்புகளும்
அணிதிரளும் ஆற்றலும்
நேயர்கள் குழாமும் என
நேர்பாதைப் பயணம்
மொழிவளத்தில் இளையவர்கள்
முதல்நிலையில் முன்னேறி
தடம்பதித்து உயர்கிறது
தன்னிலையில் மிளிர்கிறது
சாலவும் சிறப்பே புலம்பெயர் எழுத்தாளர் மாதம்
பூக்கின்ற எழிலே புதுயுகத்து அரணே
அர்ப்பணிக்கும் பொழுது ஆக்குதிறன் விருது
ஆனியென உதயம்
ஆகுமே மகுடம்.
ஒற்றுமையே வலுவாய்
ஒங்கட்டும் உலகாய்.!
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan