நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

வஜிதா முஹம்மட்

வலி

ஊமைக் காயத்தின்
உணர்வுகளின் ஈரம்

சாம்பல் பூத்த வேதனைகள்
விழி கக்கும் பாரம்

நினைவுகள் சுரக்கும்
௨றுதிகள் இழக்கும்
நேரம்

இதயம் ௨டையும்
நினைவு ஆட்டும்
விலகிச் செல்லா சுமை
வாட்டும்

காயத் தழும்பு தெரியா
வேதனை
தூக்கி எறிய முடியாத
சோதனை

வலிதாங்கா இயற்கை
சீற்றத்தால் சீறும்

வாய் பேசா ௨யிரினமும்
வலி வந்தால்
கோபத்தால் வெடிக்கும்

நா கொடுக்கும் வலி
நம்மைை அறிதாத எறி

௨ணர்வோடு ௨றவாடி
௨ள்ளத்தால் ௨ள்ளாகி

௨டலோடு சங்கமித்து
விழிகளை வடிகாலாக்கி
வேதனையை வெளிக்காட்டும்
வலி

Nada Mohan
Author: Nada Mohan