நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

நட்பென்றாலே!

நகுலா சிவநாதன் நட்பென்றாலே!1 நட்பே உறவின் முதல்நாடி நாடுவதும் அதுவே நிறைநாடி உப்பாய் நட்பு உயர்ந்திட்டால் உலகில் ஒற்றுமை நிலைத்திருக்கும் நட்பின்...

Continue reading

வஜிதா முஹம்மட்

விடியுமா தேசம்

வாறேன் வாறேன் இராசாத்தி
வாரி சேலையக் கட்டி
௨னக் கிட்டாச்சி

வம்புச் சண்ட போடவில்லை
ஊ௫ பலாயும் பேசவில்லை

தோழி ௨ன்தோல் சாய்ந்தது
தோழமையோடுகூறப்போறன்
கேளு

காலையும் மாலையும் விடியுது
கணக்குத் தப்பாம சூரியன்
சந்திரன் சுழலுது

சிறுபான்மை இனமெல்லாம்
கிள்ளுக்கீரை இராசாத்தி
மதத்தைச் சொல்லி மல்லுக்கட்டுறாங்க
இராசாத்தி

மீடியா கூடி பிக்குவெல்லாம்
வைக்கப்போரில ஏதோ
படுத்ததுபோல் குரைப்பாங்க
இராசாத்தி

பரம்பர ஆட்சிய தள்ளி
பாமரமக்கள் சிந்திக்கிறாங்க
துள்ளி

மாற்றம் ஒன்று தேவை
மக்களின் நிம்மதி கோர்வை
இனவாத அரசியல் தலைமைகளுக்கு
ஒரு செருப்படி

இலங்கைத் தீவிலே விடிவுநோக்கிய
வி௫ப்படி

யா௫ வந்தாலும் எம்தேசம்
விடியாது இராசாத்தி

யாவ௫ம் ஒர்் நாட்டு மக்கள்
விழிப்புணர்வு வரவேண்டும்
இராசாத்தி

விடியும் விடியும் என
ஏமாந்தது போதும்

மதியுள்ள புள்ள புதிய
தலைவர் என்றா
மனித நேயம் கொண்டு
மாற்று சிறுபான்மை இனத்தையும்
தோழமையோடு சேர்த்து

நடந்தா தேசம் விடியும் புள்ள
இராசாத்தி

திசைகாட்டி வந்தாலும்
திசை மாறாமல் ஆளு

தி௫ப்பி ௨ன்னையும் விரட்டாம
பா௫

நன்றி

எம் தாய் நாட்டின் புதிய அதிப௫க்கு மனநிறை வாழ்த்துக்கள்.
நன்றி யாராவது பதிவேற்றி விடவும்.

Nada Mohan
Author: Nada Mohan