கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அனலாக் ஆண்டுகள் நாற்பத்தைந்து..

வசந்தா ஜெகதீசன் .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின் கணக்கிலே தமிழரின்...

Continue reading

வதைகளும் வாதைகளும்

ரஜனி அன்ரன் (B.A) “வதைகளும் வாதைகளும்” 26.06.2025

அப்பாவிகளை அடிபணிய வைக்க
அடியாட்களை வைத்து வதை செய்ய
மூளைச் சலவை செய்ய
இல்லாததை ஒப்புவிக்க
சித்திரவதைகளும் வாதைகளும்
சில்லறையாகி விட்டதே உலகப்பரப்பில் !

சித்திர வதைகளைத் தடுக்கவே
அச்சாரமாய் உருவாக்கியதே ஐ.நா.மன்றும்
ஆனித்திங்கள் இருபத்தியாறினை
அகிலஉலக சித்திரவதைகள் தடுப்புத்தினமாக !

குற்றங்களை ஒப்புக் கொள்ள
தகவல்களைப் பெற்றுக் கொள்ள
சரணடைய வைக்கவென
சாத்தியமானதே வதைகளும் வாதைகளும் !

மனிதனால் மனிதனுக்கு இழைக்கும்
மனிதாபி மானமற்ற செயல்களைத் தடுக்க
குற்றமற்றவர் பாதுகாக்கப்பட
வதைகளைத் தடுக்க
வாதைகளைக் குறைக்க
கீதையாய் வந்ததே மன்னுலகில்
சித்திரவதைகள் தடுப்புத்தினம் !