சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

வதைகளும் வாதைகளும்

ரஜனி அன்ரன் (B.A) “வதைகளும் வாதைகளும்” 26.06.2025

அப்பாவிகளை அடிபணிய வைக்க
அடியாட்களை வைத்து வதை செய்ய
மூளைச் சலவை செய்ய
இல்லாததை ஒப்புவிக்க
சித்திரவதைகளும் வாதைகளும்
சில்லறையாகி விட்டதே உலகப்பரப்பில் !

சித்திர வதைகளைத் தடுக்கவே
அச்சாரமாய் உருவாக்கியதே ஐ.நா.மன்றும்
ஆனித்திங்கள் இருபத்தியாறினை
அகிலஉலக சித்திரவதைகள் தடுப்புத்தினமாக !

குற்றங்களை ஒப்புக் கொள்ள
தகவல்களைப் பெற்றுக் கொள்ள
சரணடைய வைக்கவென
சாத்தியமானதே வதைகளும் வாதைகளும் !

மனிதனால் மனிதனுக்கு இழைக்கும்
மனிதாபி மானமற்ற செயல்களைத் தடுக்க
குற்றமற்றவர் பாதுகாக்கப்பட
வதைகளைத் தடுக்க
வாதைகளைக் குறைக்க
கீதையாய் வந்ததே மன்னுலகில்
சித்திரவதைகள் தடுப்புத்தினம் !