இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

வதைகளும் வாதைகளும்

ரஜனி அன்ரன் (B.A) “வதைகளும் வாதைகளும்” 26.06.2025

அப்பாவிகளை அடிபணிய வைக்க
அடியாட்களை வைத்து வதை செய்ய
மூளைச் சலவை செய்ய
இல்லாததை ஒப்புவிக்க
சித்திரவதைகளும் வாதைகளும்
சில்லறையாகி விட்டதே உலகப்பரப்பில் !

சித்திர வதைகளைத் தடுக்கவே
அச்சாரமாய் உருவாக்கியதே ஐ.நா.மன்றும்
ஆனித்திங்கள் இருபத்தியாறினை
அகிலஉலக சித்திரவதைகள் தடுப்புத்தினமாக !

குற்றங்களை ஒப்புக் கொள்ள
தகவல்களைப் பெற்றுக் கொள்ள
சரணடைய வைக்கவென
சாத்தியமானதே வதைகளும் வாதைகளும் !

மனிதனால் மனிதனுக்கு இழைக்கும்
மனிதாபி மானமற்ற செயல்களைத் தடுக்க
குற்றமற்றவர் பாதுகாக்கப்பட
வதைகளைத் தடுக்க
வாதைகளைக் குறைக்க
கீதையாய் வந்ததே மன்னுலகில்
சித்திரவதைகள் தடுப்புத்தினம் !

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading