” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வரம்பு மீறாதே

வரம்பு மீறாதே சர்வேஸ்வரி சிவரூபன்
ஃஃஃஃஃஃஃஃஃ

மனிதம் சிறக்க பழகு மனிதா

புனிதம் அதை உணர்வாய் என்றும்

கவனம் பேச்சில் கண்ணியம் வேண்டும்

புவனம் உன்னை வாழ்த்தவும் நிற்பாய்

வரம்பு மீறாதே வார்த்தை ஆடாதே

எலும்பைப் பொன்னாக்க முடியாது உன்னாலே

கற்றது கையளவு கல்லாதது உலகளவு

காவியத்தை புரட்டாதே காலத்தை மாற்றாதே

நேரத்தை வீணாக்கி நிம்மதியை இழக்காதே

ஏற்கவே பேசு ஏளனம் தேவையில்லை

நோக்கவே நிற்பாய் நோதலும் வீணே

நாகாக்க என்பது நன்மை பயக்குமே

கோள் காவியல்ல கோமக்கள் பாரு
வாள்போன்று வரப்புயர வழியேக வரவேற்பு

சர்வேஸ்வரி சிவரூபன்

Author: