பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

வரம்பு மீறாதே

வரம்பு மீறாதே சர்வேஸ்வரி சிவரூபன்
ஃஃஃஃஃஃஃஃஃ

மனிதம் சிறக்க பழகு மனிதா

புனிதம் அதை உணர்வாய் என்றும்

கவனம் பேச்சில் கண்ணியம் வேண்டும்

புவனம் உன்னை வாழ்த்தவும் நிற்பாய்

வரம்பு மீறாதே வார்த்தை ஆடாதே

எலும்பைப் பொன்னாக்க முடியாது உன்னாலே

கற்றது கையளவு கல்லாதது உலகளவு

காவியத்தை புரட்டாதே காலத்தை மாற்றாதே

நேரத்தை வீணாக்கி நிம்மதியை இழக்காதே

ஏற்கவே பேசு ஏளனம் தேவையில்லை

நோக்கவே நிற்பாய் நோதலும் வீணே

நாகாக்க என்பது நன்மை பயக்குமே

கோள் காவியல்ல கோமக்கள் பாரு
வாள்போன்று வரப்புயர வழியேக வரவேற்பு

சர்வேஸ்வரி சிவரூபன்

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading