வருமா வசந்தம்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

சுற்றி வரும் பூமிப்பந்து
இக் காலமதில் தொற்றிடும்
வசந்தம்

பற்றித் தொடரும் நீண்ட பகலுடன் குறுகிய இரவில்
வெப்பமிடும் பந்தம்

மாற்றி மாற்றி வரக் காலநிலையில் காத்திருந்த மரக் கிளையில் அரும்பு
மொட்டுகளின் தந்தம்

வெற்றிக் கனி தரும் மொட்டுகள் ஆயிரம்
கனவுகளுடன் சொந்தம் கொண்டாட உயிர்த்திடும்
பூவின் சந்தம்

தேடி வரும் தேவதை
வண்ணப் பூச்சி சிந்து
பாடிக் கனியாகிட
என்ன சுவை என உண்டு
சுவைத்த நாவில் மீண்டும்
வருமா வசந்தம் ?

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading