” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வலியதோ முதுமை

கவி 717

வலியதோ முதுமை

இளமை விடைபெற முதுமை குடியேற
முறுக்கேறிய தேகம் சுருங்கியே உறுதிகுலைய
துள்ளிய கால்களும் மெல்லவே அசையும்
சிறுமை சீண்டிவிடும் முதுமை கொடுமையே

சொந்தம் சுற்றியிருந்தும் நொந்த வாழ்வு
நேசமும் பாசமும் உடம்பில் தெம்பிருக்கும்போதே
அவரவர்களுக்கு அவரவர் வேலை முக்கியம்
கையாலாகாத அவலம் முதுமையின் சாபக்கேடே

உயிர் மீதான ஆசை யாருக்குத்தானில்லை
வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கவரும் மரணம்
முதுமையில் துணையில்லாமல் தனிமை தண்டனையே
புதிது புதிதாய் முளைத்துவிடும் வலியதுவே

இனிமையை அழித்தே முதுமை விளையுமே
விடை கொடுத்திடும் பருவம் அடையுமே
மருந்தே உணவாக உணவே வெறுப்பாகுமே
கம்பீரம் உருக்குலைய கைத்தடி துணையாகுமே

காலனுக்காக காத்திருக்கும் முதுமையெனும் நிலைமை
முடக்கிப்போட்டே அறைக்குள் சிறைப்படுத்தும் தனிமை
சுருங்கும் உலகுக்குள் உணர்வுகள் ஒடுக்கப்படும்
பிரயோசனமற்ற பொருளாகும் முதுமை சாபமே

ஜெயம்
28-03-2024

Nada Mohan
Author: Nada Mohan