” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வலியதோ முதுமை

அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-23

28-03-2024

வலியதோ முதுமை

வலிமை கொண்டவர்க்கு
முதுமையொரு பொக்கிஷ்ம்
வாழ்ந்து சாதித்த இளமையின்
மொத்த அனுபவம்!

சுருக்கங்களிங்கே உலகிற்காய்
உதவிய கரங்கள்
நோக்கங்கள் எதுவுமற்ற
சிறப்பு நியங்கள்!

இறப்பென்பது தலைவிதி
புரிந்த பக்குவம்
இதில் நரையென்பது
முதுமையின் அழகு

ஊருக்கும், உறவிற்கும்
உதவிய பின்
தனக்கென
தானமும் சேர்த்தவர்.

நொந்த நிலையிலும்
நோகாமல் வாழ
வந்து உதவுவோர்க்கு வாரி
வளங்கும் வள்ளலானார்.

வலியதோ முதுமை
வந்தாலும்
மெலியவே போகக்
காண்பீர் இவர் பலம்.

தான, தருமத்தோடு
தனக்கென தக்காத்துவர
பரம்பரையும் உனைக்காத்து வரும்
புகட்டிச் சென்ற பண்பாளன்.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan