” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வாழ்வின் தேற்றம்

ஜெயம் தங்கராஜா

இன்பம் துன்பம் இரண்டினதும் கலப்பு
புன்னகையும் அழுகையும் சேர்ந்ததொரு அமைப்பு
தினமும் அனுபவங்களை சேர்த்துக்கொள்ளும் தன்மை
மனதின் வடிவமே வாழ்வாகிடும் உண்மை

வண்டாகப் பறந்து மலருக்குமலர் தாவியும்
பண்பாடி பறந்து குயிலென கூவியும்
உண்டு உடுத்தி உறங்கும் சீவியம்
உண்மையிலே இந்த வாழ்வொரு காவியம்

பிறப்பிற்கும் இறப்பிற்கும் நடுவிலான ஆட்டம்
திறந்தவெளி திடலிலே சுதந்திரமாய் ஓட்டம்
பறந்துமே இரவுபகல் இரைதேடும் கூட்டம்
சிறப்பாக வாழ்ந்திட பெருங்கொள்ளை நாட்டம்

எதற்காக பூவுலக வருகையும் இங்கே
அதற்குப் பின்னாலே செல்லுவதும் எங்கே
பெறுதலும் மறைதலும் வாழ்வென்று ஆகிவிட்டது
இறப்பெனும் சாபத்தை யாரிங்கு இட்டது

Nada Mohan
Author: Nada Mohan