நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

“விசித்திரம்”

நேவிஸ் பிலிப் கவி இல (448)

துளையிடா மூங்கில்
புல்லாங்குழலாகிடுமோ
உளி படா கற்களும் தான்
சிற்பங்களாகிடுமா.?

பட்டுப் புழுக்களும்
பட்டாம் பூச்சிகளும்
படுகின்ற துன்பங்களும்
உருப் பெறும் அழகும்
விசித்திரமே!!!

சுடச் சுடத் தங்கம்
ஒளிர்வது போல்
தேயத் தேய சந்தணம்
மணப்பது போல்

துன்பக் கடலிடை துடுப்பில்லா
படகோட்டும் எளியோர் நாம்
இறக்கமில்லா ஏற்றம்தான் காண்போமோ?

விசித்திரக் கலவையாம் வாழ்க்கையிலே
துன்பமின்றி இன்பமில்லை
அழிவின்றி உயர்ர்வில்லை -ஆனாலும்
பட்டறிவால் இன்பம்வரும் நிட்சயமே.
நன்றி,,,,,,

Nada Mohan
Author: Nada Mohan