“விசித்திரம்”

நேவிஸ் பிலிப் கவி இல (448)

துளையிடா மூங்கில்
புல்லாங்குழலாகிடுமோ
உளி படா கற்களும் தான்
சிற்பங்களாகிடுமா.?

பட்டுப் புழுக்களும்
பட்டாம் பூச்சிகளும்
படுகின்ற துன்பங்களும்
உருப் பெறும் அழகும்
விசித்திரமே!!!

சுடச் சுடத் தங்கம்
ஒளிர்வது போல்
தேயத் தேய சந்தணம்
மணப்பது போல்

துன்பக் கடலிடை துடுப்பில்லா
படகோட்டும் எளியோர் நாம்
இறக்கமில்லா ஏற்றம்தான் காண்போமோ?

விசித்திரக் கலவையாம் வாழ்க்கையிலே
துன்பமின்றி இன்பமில்லை
அழிவின்றி உயர்ர்வில்லை -ஆனாலும்
பட்டறிவால் இன்பம்வரும் நிட்சயமே.
நன்றி,,,,,,

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading