மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

விடியாத இரவொன்று இல (124). 14/03/24

விடியாத இரவொன்றில்
துயிலாத கண்ணிரண்டு
இமை மூட மறுத்து
துடிக்கிது தவித்த படி

மனக் கிடங்கில்
புதைந்து கிடக்கும்
எண்ணங்கள் ஏராளமாய்
மீட்டிப் பார்க்குது விழி நீர் வடிய

பச்சை மரத்துக்குப் பால் வார்க்க
உழைத்துக் காய்ந்த கரங்கள்
குடும்ப பாரம் தாங்கிச் சோர்ந்த
கூனிப் போன முதுகு

யாருமற்ற அநாதையாக
கை விடப் பட்ட கையறு நிலை
தனிமையில் தவிக்குது
பட்ட மரமாய் இன்று

நீடிக்க வேண்டாமே இந்த அவல நிலை
விடியாத இரவுகளை விடிய வைப்போம்
வளமான வாழ்வளித்து
எம் முதியோரை ஆதரிப்போம் .
நன்றி வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading