” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

விழித்தெழு மனிதா!!

நகுலா சிவநாதன்

விழித்தெழு மனிதா!!

விழித்தெழு மனிதா வித்தகத் திறனாய்
வினைத்திறன் கொண்டு விரைந்துவா
கழிந்தது காலம் கனிந்தது உறவினில்
கவிழ்ந்தது படகும் கார்த்திகை மாதம்
எழிந்திட முனைந்து எடுத்திடு கருவியை
ஏற்றமாய் வானும் இறைந்திடும் வரமாய்
உழுதிடு வயலை உணவிடு பாரில்
உறங்கிடா வாழ்வை உறுதியாய் கொள்ளு!

புதுயுக மனிதன் புனிதனாய் எழுக
பூத்திடும் மலர்கள் சாட்சியாய் பகிர
பதியது போதும் பலமிகு மனிதா
படைப்பது உனது வேலையாய் கொள்க
நிதியது கிடைக்க நிம்மதி ஏற்று
நித்தமும் உழைப்பே முதலாய் தீட்டு

நகுலா சிவநாதன் 1836

Author: