” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

விழித்தெழு

18.04.24
ஆக்கம் 312
விழித்தெழு

எழும்போது நீ விழுகிறாய்
விழும்போது நீயே எழுகிறாய்
முழுசும் நினைவு
கனவுகள் அறைகிறது
கழுகு மரத்தில்

விழுபவனைத் தூக்கி
நிறுத்தக் கை கொடுக்க
மறுப்பவனோ விழுந்து
விழுந்து சிரிக்கிறான்
கிறுக்குப் பிடித்தவன் போல

சுத்தமிலாக் கண்கள்
அசுத்த மனம் சிந்திக்குமா
சிந்தனை மூழ்கிட
வந்தது சமாளிக்கக்
காட்டும் வேடிக்கை
வினோதம் அற்புதம்

வயிறு முட்ட ஆண்டவர்
செரிக்கக் காட்டும் குழப்பம் போக்க
விழித்தெழு மனிதா
அறிவொளி ஊட்ட
புத்துயிரோடு புதுப்
பொலிவோடு விழித்தெழு.
ராணி சம்பந்தர்
ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan