நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

வெள்ளப்பெருக்கு 1

ஜெயம்

இயற்கை கற்றுத்தந்தது ஒரு பாடம்
அது மானிடர்க்கு கூறும் கதை
வெள்ளம் அடித்து வாழ்க்கையை சாய்க்கின்றது
கண நேரத்தில் இராணுவம் ஆக்கிரமித்ததுபோல்

தெருக்கள் அனைத்தும் பெயர்களை இழந்தன
நீரின் ஆட்சிக்கு உட்பட்டன வீடுகள்
வெள்ளம் கதவுகளை தள்ளி நுழைகின்றபோது
எத்தனை கடவுளின் பெயர்கள் ஒலிக்கின்றன

அழகான இயற்கை பச்சை காவியம்
அது கோபித்தால் சீர்க்குலயும் மானுடம்
கருணை இல்லாத அந்த கொந்தளிப்பு
வேர்களை குலுக்கி அடியோடு சாய்த்துவிடும்

Author: