” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வெள்ளி விழா நிறை வாழ்த்து

இரா.விஜயகௌரி
தமிழோடு எழில் கொஞ்சும்
வித்தகத்தாள் வினைத்திறன் மிக்காள்
இல்லறத்தில் இராகவனார் கைப்பிடித்த
நிறைவான திருநாள் வெள்ளிவிழா மணநாள்
சித்திரமாய் புத்திர்ர்கள் சீர் நிறைய இளையமகள்
கொட்டி வைத்த அன்பெழுதி
குவலயத்தில் பத்திரமாய் பவித்திரமாய்
எழுதி வைத்த அழகான வாழ்வுக்கும் சான்று

நித்தியமாய் இவர் வாழ்வில் நிதம்
இழை பின்னியெழும் பக்குவமும் பரிவும்
சுற்றமெலாம் சூழ சுகந்தமென அன்பெழுத
கடிகாரக் கம்பிகளாய் இணைபிரியாதெழுக

பாமுகத்தின் சொந்தமிவள் பாசமுடன்
தமிழால் கோலமிடும் பெருங்கவியை
இராகவனார் கையிழைய கொஞ்சியெழும்
பாசமுடன் நீடு வாழி இணை பிரியா
சொந்தமென வெள்ளி விழா நாயகியாய்
நீடு நிலை பெற வாழி வாழி

Nada Mohan
Author: Nada Mohan