நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

ஷர்ளா தரன்

கந்து வட்டிக்கு காசு வாங்கி
கடனில் கல்லு பறித்து
வெந்திடும் வெய்யிலில்
வியர்வையால் குளித்து
அத்திவாரம் தோண்டி
ஐந்து சந்தி மண் எடுத்து
ஐங்கரன் துனணயோடு
அடிக்கல் நாட்டி
கொஞ்சம் கொஞ்சமாய்
கட்டிய வீடு
சொர்க்கம் போல் வாழ
சொந்தங்களோடு வாழ
அத்திவாரமோ பலம்
ஆடாமல் நிற்குது பார்….

பெற்ற பிள்ளைகளை
பெருமையோடு வளர்க்க
கற்ற கல்வி அது துனண போகும்
அரிச்சுவடி முதல் அறுவடை வரை
அகலாது அத்திவாரத்தின் பலம்
பெற்றவர் கை தனில்
பொறுப்பு உண்டு
கற்றவராய் வளர்ந்திட
கை கொடுத்து வளர்த்திடு
அத்திவாரம் தனை
அசையாமல் போட்டிடு

ஷர்ளா தரன்

Nada Mohan
Author: Nada Mohan