பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

சி.பேரின்பநாதன்

வியாழன் கவிதை 03-03-2022
ஆக்கம் – 34
விடியலின் உன்னதம்

மாலை மயக்கத்தில் ஆழக்கடலினில்
வீழ்ந்துவிட்ட ஆதவன் நீலக்கடல் நீந்தி
எழுகதிர் வீசில் உயிர்த்தெழுவான்
பல்உயிர்கள் யாவற்கும் மறுபிறப்பாகும்
பயிரினங்கள் யாவிற்க்கும் புத்துணர்வாகும்
இயற்கையின் விடியல் உன்னதமாகும்

எல்லோர்க்கும் எப்பொழுதும்
விடியலின் உன்னதம் கிடைப்பதில்லை
ஆதிக்க வெறியர்களின் ஆட்சிகளின் கீழ்
ஆதிக்குடிகள் நீதி வேண்டி அலைகின்றார்கள்
காலம் காலமாய் காத்துக்கிடக்கின்றார்கள்
நாளை விடியுமென்ற நம்பிக்கையில்

உன்னதமான விடியலைத்தேடி
உக்கிரேன் மக்கள் தவிக்கின்றார்கள்
சன்னதம் கொண்டு நிற்கின்றது உலகம்
ரஸ்யாவை தடுத்து நிறுத்தாமல்
இரவும் பகலும் இடியோசை
எங்கும் ஓலிக்கின்றது
மக்களின் அழுகுரல் ஓசை

போரிடும் உலகம் வேருடன்
சாய்ந்திடல் வேண்டும்
மனிதம் இங்கே புனிதமாக வேண்டும்
மாண்புடன் வாழும் நிலைபெற வேண்டும்
புதிய விடியல் உன்னதமாக வேண்டும்

ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்
01-03-2022

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading