நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

வாழ்வு சிறக்கும்

பிறக்கும் போதே
இறப்பும் எழுதப்படும்.
இது இயற்கை விதி.
இறந்தவர் மீண்டும்
எழுவதில்லை.
இதுவும் இயற்கையின் நியதி.
வாழும் போது வாய்மை
தவறாது வாழவேண்டும்.
மீளும் நினைவுகள்
மென்மையுடன் காணவேண்டும்.
மனதிலே வஞ்சினம் வேண்டாம்.
செயவது நல்ல காரியம்,
செயல்பட நல் ஏண்ணம்.
நன்றியுள்ள நாய் கூட
வாலை ஆட்டும் நன்றியுடன்.
நன்றி மறந்தோர் செயல்
மனதை வருத்தும்.
நீயும் நன்றியுள்ள
மனிதனாக வாழக் கற்றுக்கொள்.
வாழ்வும் சிறக்கும்
உனது வாழ்வும் சிறக்கும்.

கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan