-எல்லாளன்

எதிர்ப்பலை
அதிருது அதிருதுகாலிமுகக் கரை
அலைகடலாய் அங்கு மக்கள் அலை
பதறுது பதறுது அரசகுலம்
பாராலும் அமைச்சவை நிர்மூலம்.
ஒக்றைக்குடும்ப ஆட்சியினால்
ஊழலால் பொருண்மிய வீட்சியினால்
கத்தை கத்தையாய் வெளிநாட்டில்
காசுகள் சொத்துகள் குவித்ததனால்

எரிபொருள் இல்லை விலைவாசி
எல்லாம் இழந்து குடிவாசி
உயர்த்த பணி புரியும் அதிகாரி
உணவுக்கு வரிசையில் பலகோடி

ஆட்சியை இறக்க போராட்டம்
ஆடுகிறார் இளம் படைக் கூட்டம்
வீட்சியில் இன மத வெறியாட்டம்
விடியட்டும் சமத்துவம் தாய்நாட்டில்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading