ஆளுகின்றான் அடிபணிகின்றோம்..!!

வியாழன்கவி 2300!! ஆளுகின்றான் அடிபணிகிறோம்!! வாழுகின்ற வாழ்க்கையிலே வழி நெடுக பயணிப்பான் ஆளுகின்ற அழுத்தக்காரன் வீழ்ந்திடுவான் உழைப்பாலே சோம்பலென்று கிடந்தாலோ தூரம்...

Continue reading

வரமாகும் வாய்ப்புக்களே

இரா.விஜயகௌரி வரமாகும் வாய்ப்புக்கள் அவை தடமாகும் செயல் தழுவின் உரமாய் நாம் பயன்கொள்ளின் உரைத்தெழுதும் நம் தடங்கள் வாய்த்ததெல்லாம்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

கவி 605
உழைப்பு

உழைப்பு என்பது மொத்தத்தில் சிறப்பு
உழைப்பு அதில் காட்டக்கூடாது வெறுப்பு
உழைப்பு உயர்வாழ்க்கையின் வாயிலின் திறப்பு
உழைப்பால் வந்திடும் சமுதாயப் பொறுப்பு

உழைப்பில்லா பிறப்பு மூச்சிருந்தும் பிணம்
உழைப்பைத் தவிர்ப்பவர் சோம்பலின் இனம்
உழைப்போரே மேலோர் வாய்ப்புகள் கைகுலுக்கும்
உழையாது உட்காந்தோரை காலமும் எள்ளிநகைக்கும்

உழையாது கழிப்போர்க்கு என்றுமேயில்லை மன்னிப்பு
உழைப்பொன்றாலே வாழ்க்கையில் கிடைக்கும் பூரிப்பு
உழைப்பால் உண்டாகும் ஆயுளுக்கும் சுறுசுறுப்பு
உழைப்பு இதுதானென கற்றுக்கொடுக்குதே எறும்பு

உழைப்பிற்கு உறவாகும் உலகத்துப் பரப்பு
உழைப்பை நோக்கியே உள்ளத்தைத் திருப்பு
உழைப்பால் வாழ்க்கையில் வருமொரு பிடிப்பு
உழைப்பாலே உண்டாகும் பற்பல படைப்பு

ஜெயம்
01/05/2022

Nada Mohan
Author: Nada Mohan